Friday, January 19, 2018

இப்போது என்ன சொல்வார் “சுத்துமாத்து” சுமந்திரன்?

இப்போது என்ன சொல்வார் “சுத்துமாத்து” சுமந்திரன்?
சுமந்திரன் ஜெனிவா வந்தபோது தமிழ் இளைஞர் ஒருவரால் விரட்டி விரட்டி நையப்புடைக்கப்பட்டார்.
சுமந்திரன் லண்டன் வந்தபோது இளைஞர்களால் கேள்வி கேட்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.
சுமந்திரன் கனடா வந்தபோதும் தமிழ் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டார்.
சுமந்திரன் அவுஸ்ரேலியா வந்தபோது கூட்டம் நடத்தவிடாமல் இடை நடுவில் துரத்தியடிக்கப்பட்டார்.
அப்போதெல்லாம் அவரும் அவருடைய செம்புகளும் கூறிய பதில் “வாக்கு போட்ட மக்கள்தான் கேட்க முடியும். புலம்பெயர் தமிழர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”
இப்போது ஈழத்தில், அதுவும் 324 நாட்களாக போராட்டம் நடத்தும் காணாமல்போனவர்களின் உறவுகள் சுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர்.
அம் மக்கள் சுமந்திரனை “துரோகி” என்று கூறி அவர் படத்திற்கு மண் வாரி தூற்றி ஒப்பாரி வைத்து அழுதுள்ளனர்.
தாயகத்தில் அவருக்கு வாக்கு அளித்த மக்களே இப்போது அவருக்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
இப்போது சமந்திரனோ அல்லது அவருக்கு ஆதரவான செம்புகளோ இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

No comments:

Post a Comment