Wednesday, January 31, 2018

வைதீக பார்ப்பானைவிட ஆபத்தானவன் பகுத்தறிவு பேசும் பார்ப்பான்!

•வைதீக பார்ப்பானைவிட
ஆபத்தானவன் பகுத்தறிவு பேசும் பார்ப்பான்!
வைரமுத்து பிரச்சனையில் மௌனம் காத்த நடிகர் கமல் விஜேந்திரர் பிரச்சனையில் ஓடிவந்து குரல் கொடுத்துள்ளார்.
தியானம் செய்வது சங்கராச்சாரியாரின் கடமை என்று அவர் கூறியுள்ளார்
கண்ட இடத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாட வேண்டாம் என்று வேற அட்வைஸ் செய்துள்ளார்.
கமல் அவர்களே!
•கண்ட இடத்தில் தியானம் செய்யக்கூடாது என்று ஏன் உங்களால் விஜேந்திரருக்கு கூறமுடியவில்லை?
•கண்ட இடத்தில் தேசியகீதம் பாடலாம். அந்த இடத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடக்கூடாதா?
•ஆளுநர் கலந்துகொள்ளும் கூட்டம் கண்ட இடம் என்றால் தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்குரிய உகந்த இடம் எது?
இவர்கள் எல்லாம்
இருப்பது தமிழ்நாட்டில்
பிழைப்பது தமிழனை வைத்து
தின்பது தமிழன் போடும் சோறு
சுவாசிப்பது தமிழ் மண் காத்து
ஆனால்
தமிழ்தாய்க்கு மரியாதை கொடுக்க மாட்டார்களாம்.
தேசியகீதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டால்
பாகிஸ்தான் போ என்று கூறும் இவர்களை
தமிழ்தாய்க்கு மரியாதை கொடுக்காவிட்டால்
தமிழ்நாட்டைவிட்டு போ என்று
எங்களாலும் கூறமுடியும் அல்லவா!

No comments:

Post a Comment