Friday, January 19, 2018

எச்ச ராஜா கர்நாடாகா சென்று ஒரு கன்னடனை “தாசி மகன்” என்று கூறமுடியுமா?

எச்ச ராஜா கர்நாடாகா சென்று ஒரு கன்னடனை “தாசி மகன்” என்று கூறமுடியுமா?
அல்லது கேரளா சென்று ஒரு மலையாளியை “தாசி மகன”; என்று கூறமுடியுமா?
தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த கூட்டம் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு
தமிழனையே “தாசிமகன”என்றுகூறும் தைரியம் பெற்றுவிட்டது!
நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல் இருக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று புகழ்ந்தார் கவிஞர் வைரமுத்து.
இப்போது பாஜக தேசிய செயலர் எச்ச ராஜா கவிஞர் வைரமுத்துவை தாசிமகன் என்று இகழ்ந்து பேசி உள்ளார்.
கவிஞர் வைரமுத்துவிற்கு இது தேவைதான். இனிமேல் மறந்தும் பாஜக தலைவர்களை அவர் புகழ்ந்து பேச மாட்டார்.
ஆனால் எச்ச ராஜா பொதுவெளியில் “தாசிமகன்” என்று பேசிய பினபும் ஒரு மாதர் சங்கம்கூட இதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமல்ல, வைரமுத்துவின் தலை வீதியில் உருள வேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் எச்ச ராஜா பேசியதற்கும் தமிழக பொலிஸ் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கார்ட்டூன் பாலாவை விரைந்து கைது செய்த தமிழக பொலிஸ் எச்ச ராஜா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்?
முதலில் திருமாவளவனை கைது செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்றார்.
இப்போது வைரமுத்துவை தாசிமகன் என்றும் அவர் தலை வீதியில் உருளும் என்றும் எச்ச ராஜா பேசுகிறார்.
நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்றார். நல்லவேளை வைரமுத்துவை டேவிட் முத்து என்று சொல்லவில்லை.
கடவுள்தான் கலைஞர் கருணாநிதியின் சவுண்ட்கார்ட்டை பிடுங்கியது என்று கருணாநிதியின் முதுமையை கிண்டல் செய்தார்.
இவர் அடுத்து என்ன பேசுவார் என்று தெரியவில்லை. அவர் பையித்தியம் பிடித்து உளறுகிறார்.
எனவே தமிழக பொலிசார் உடனடியாக அவரை கைது செய்து அவருக்கு சிகிச்சை கிடைக்க வழி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்தவர் தமிழனைப் பார்த்து தாசிமகன் என்று கூறுகிறார்.
இதுவே இன்னொரு மாநிலமாக இருந்திருந்தால் இப்படி சொல்ல தைரியம் வருமா?
அல்லது சொல்லிவிட்டு சொன்னவர் உயிரோடு இருந்திட முடியுமா?

No comments:

Post a Comment