Friday, January 19, 2018

பொங்கல் நாளில் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!

•உழைக்கும் மக்களின் உரிமை நாளாம்
உழவர் மக்களின் நன்னாளாம் பொங்கல் நாளில்
அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!
இடது விழியில் தூசு விழுந்தால் 
வலது விழியும் கலங்கும்
ஒரு தமிழன் போராடும்போது
இன்னொரு தமிழன் பொங்கல்
கொண்டாட முடியுமா?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்
324 நாட்களாக போராடும்
காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு
வழி பிறக்குமா?
ஊனமானாலும் உழவன்
உழைத்து தின்ன வேண்டிய நிலை
வாழ வழியின்றி தினமும் இரண்டு விவசாயி
தற்கொலை செய்கிறான்.
காப்ரேட் கம்பனிகளுக்கு உதவும் அரசு
விவசாயிகளுக்கு உதவ மறுக்கிறது.
தேர்தல் மூலம் விடிவு வராது
ஆயுதப் போராட்டமே தீர்வு பெற்று தரும்
அனைவரும் ஒன்று திரண்டு போராட
இந்நாளில் சபதம் மேற்கொள்வோம்!

No comments:

Post a Comment