Friday, January 19, 2018

நீண்ட நெடிய உருவம்

நீண்ட நெடிய உருவம்
கருத்த மை பூசிய தடித்த மீசை
கஞ்சி போட்ட வெள்ளை உடை
மண்டியிட்டு மன்னிப்பு கோரலாமா?
அதைவிட நிமிர்ந்து நின்று
உயிர் மாண்டிருக்கலாமே!
ஆயிரம் பார்ப்பணர்களின்
தலையை அறுத்தவன்
ஊர் எல்லையில் வீச்சரிவாளுடன்
கருத்தண்ணசாமியாக வணங்கப்படுகிறான்
நிமிர்ந்து நின்று
உன் தலை வீதியில் உருண்டிருந்தால்
நீயும் ஒரு எல்லைச் சாமியாகி இருப்பாயே!
வேட்டியை மடித்து கட்டினால்
தானும் ரவுடிதான் என்று
வாய் வீராப்பு பேசியவன்
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால்
தமிழன் தலை குனிய வைத்து விட்டாயே!

No comments:

Post a Comment