Wednesday, January 31, 2018

•நித்தியானந்தாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை!

•நித்தியானந்தாவுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை!
நித்தியானந்தாவைக் கைது செயயுமாறு உத்தரவிடவேண்டி வரும் என்றும் அவரது ஆச்சிரமங்களை முடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.
இப்போது பிரச்சனை என்னவென்றால் யாரோ ஒரு ஆண்டாளுக்காக பொங்கிய நித்தியின் சீடர்கள் தமது குருவுக்காக பொங்காமல் விடுவார்களா?
அவரது பெண் சீடர்கள் நீதிபதியை அம்பிளைதானா என்று வந்து நிரூபி என்று கேட்கப் போறாங்களே?
அதுவும் மைனர் பெண் பிள்ளைகள் நள்ளிரவில் எழும்பி வீடீயோ பதிவு போட்டு ஏசப் போகிறார்களே?
இதையெல்லாம்கூட கொஞ்சம் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரது வெள்ளைக்கார சீடர்கள் கொச்சைத் தமிழில் நீதிபதியை கெட்ட வார்த்தைகளால் திட்டப் போகிறார்களே?
அதை நினைத்தால்தான் பகீர் என்கிறது. அதுவும் நீதிபதிக்கு குண்டியில் கட்டி வந்து சாகப்போகிறார் என்று திட்டப்போவதை எப்படி கேட்பது?
ஓ! நித்தியானந்த சுவாமி அவர்களே! நீங்கள்தான் எப்படியாவது உங்கள் சீடர்களை கட்டுப்படுத்தி எங்களை காப்பாற்ற வேண்டும்.
குறிப்பு- அதுசரி நீதிபதி ஏன் வெறும் எச்சரிக்கை மட்டும் செய்கிறார்? நித்தியானந்தாவின் சக்திக்கு பயந்துவிட்டாரா?

No comments:

Post a Comment