Friday, January 19, 2018

•என்னது தந்தை செல்வா வழியிலா?

•என்னது தந்தை செல்வா வழியிலா?
நல்லவேளை இந்தக் கொடுமையைப் பார்க்க
தந்தை செல்வா உயிரோடு இல்லை!
மாவை சேனாதிராசாகூட தான் தந்தை செல்வா வழியில் செல்வதாக இதுவரை போட்டதில்லை.
ஆனால் மாவையாரின் மகன் என்ன தைரியத்தில் தந்தை செல்வா வழியில் என போஸ்டர் போட்டிருக்கிறார்?
தமிழ் மக்கள் முட்டாள்கள். அவர்களை என்ன சொல்லியும் ஏமாற்றலாம் என்ற நினைப்புதானே இதற்கு காரணம்.
மாவை சேனாதிராசா 3 வருடம் சிறை சென்றார். அதைச் சொல்லியே 30 வருடம் எம்.பி பதவியை அனுபவித்து வருகிறார்.
தந்தை செல்வா தனது சொத்தை விற்று தமிழரசுக் கட்சியை நடத்தினார். ஆனால் மாவை சேனாதிராசா தமிழரசுக்கட்சியை விற்று தனக்கு சொத்து சேர்க்கிறார்.
தந்தை செல்வாவுக்கு காங்கேசன்துறையில் மட்டுமே சொந்த வீடு இருந்தது. ஆனால் மாவை சோனாதிராசாவுக்கு பல இடங்களில் வீடுகள்.
தமிழரசுக்கட்சியின் சின்னம் வீடு என்பதாலோ தெரியவில்லை தனது வீடுகளை மட்டும் பல கோடி ரூபா செலவில் கட்டிக் கொண்டிருக்கிறார்.
தந்தை செல்வா வாடகைக் காரில் பயணம் செய்தார். ஆனால் இவரோ 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தில் பயணம் செய்கிறார்.
தந்தை செல்வா தமிழ் மக்களுக்காக தன் பதவியை துறந்தவர். தமிழ் மக்களுக்காக சத்தியாகிரக போராட்டங்களை செய்தவர்.
மாவை சேனாதிராசாவின் மகன் தமிழ் மக்களுக்காக செய்த தியாகம் என்ன?
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிலாம்தான். ஆனால் யார் வேண்டுமானாலும் தந்தை செல்வா வழியில் என்று போட்டுவிட முடியாது.
எந்த போராட்டத்திலும் பங்கு பெறாதவர், எந்தவித அர்ப்பணிப்பும் செய்யாதவர் பதவி பெற மட்டும் விரும்புவது ஏன்?
அப்பன் வழியில் சுலபமாக பணம் திரட்டவே பதவி பெற துடிக்கிறார் மகன்.
மாவைசேனாதிராசாவின் மகனை மட்டுமல்ல மாவை சேனாதிராசாவையும் துரத்தியடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment