Wednesday, January 31, 2018

•ஈழத்து கருணாந்தா சுவாமிகளின் அருளுரை!

•ஈழத்து கருணாந்தா சுவாமிகளின் அருளுரை!
ராஜீவ் காந்தியை பிரபாகரனும் பொட்டம்மானுமே கொலை செய்தனர் என்றும் அதனாலேயே இந்திய அரசு புலிகளை தடை செய்தது என்றும் கருணா அம்மான் கூறியுள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு என்னும் பிரிவினையை முன்னெடுக்கும் தமிழ்நாடு மீட்சிப்படைக்கு பயிற்சியும் உதவியும் செய்தனர் என்று கூறியே புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது.
இந்தக் காரணத்தையே ஒவ்வொரு இரண்டு வருடத்திற்குகொரு முறை தடையை நீடிக்கும்போதும் இந்திய அரசு கூறிவருகிறது.
அப்படியிருக்க கருணா அம்மான் திடீரென எதற்காக ராஜீவ்காந்தி கொலையே தடைக்கு காரணம் என கூறுகிறார்?
அதுமட்டுமல்ல, ராஜீவ்காந்தி கொலையைப் பேசியவர் அதற்கு காரணமான அமைதிப்படை என்ற பெயரில் வந்து இந்திய ராணுவம் செய்த கொலைகளை ஏன் பேசவில்லை?
இத்தனை நாளும் மகிந்த ராஜபக்சவே தமிழர்களுக்கான தலைவர் என்று கூறிக்கொண்டிருந்தவர் இப்போது எதற்காக இந்தியாவுக்கு விசுவாசமான கருத்துகளை கூறுகிறார்?
தமிழின படுகொலையாளிகளையும் அதற்கு உதவியவர்களையும் தமிழினம் ஒருபோதும் மறந்துவிடாது என்பதை கருணா மட்டுமல்ல இந்திய உளவு நிறுவனங்களும் மனதில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment