Friday, January 19, 2018

நம்ம சம்பந்தர் அய்யாவும் “ஆண்டாளும்”

•நம்ம சம்பந்தர் அய்யாவும் “ஆண்டாளும்”
தமிழகத்தில் ஆண்டாள் பிரச்சனை பற்றி எரிகிறது. நித்தியானந்தாவின் சீடர்களின் வீடியோ பேச்சுகள் பட்டய கிளப்புகின்றன.
அதனால் இப் பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழர்களின் தலைவர் சம்பந்தர் அய்யாவின் கருத்தை அறிய ஒரு நிருபர் விரும்பினார்.
நிருபர்- அய்யா, இந்த “ஆண்டாள்” பிரச்சனை பற்றி தங்கள் கருத்து என்ன?
சம்பந்தர் அய்யா- அந்த கருமத்தைப் பற்றித்தான் நானும் சுமந்திரனும் பேசி வருகிறோம்.
நிருபர்- இது தீர்வு பிரச்சனை இல்லை அய்யா. இது ஆழ்வார் தத்து எடுத்து வளர்த்த ஆண்டாள் பற்றியது.
சம்பந்தர்- அந்த காலத்தில் நிறைய பெண்களோடு எனக்கு தொடர்பு இருந்தது உண்மைதான். ஆனால் அதில ஆண்டாள் என்று யாரும் இருந்தது நினைவு இல்லையே!
நிருபர்- அய்யா! இது அய்யர் தத்து எடுத்து வளர்த்த மகள் ஆண்டாள் பற்றியது.
சம்பந்தர் அய்யா- திருகோணமலை அய்யரின் அழகான மனைவி தெரியும். ஆனால் அவர் ஆண்டாள் என்ற மகள் தத்து எடுத்தது தெரியாதே?
நிருபர் - சரி அதை விடுவம். இந்த ஜஸ்டின் ருடோ பற்றி என்ன நினைக்கிறீங்க அய்யா?
சம்பந்தர் அய்யா- அவர் தேசிய தலைவர். அவரால்தான் நான் சுதந்திரமாக திருகோணமலை சென்று வருகிறேன்.
நிருபர்- அய்யா! நான் மகிந்த ராஜபக்ச பற்றி கேட்கவில்லை. கனடா பிரதமர் பற்றி கேட்கிறேன். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று பொங்கல் நாளில் பேசியிருக்கிறார்.
சம்பந்தர் அய்யா- ஆமாம். அதற்குத்தான் தம்பி சுமந்திரனை கனடாவுக்கு அனுப்புகிறேன். இப்பொழுது நல்லாட்சி நடக்கிறது. எனவே அழுத்தம் எதுவும் தேவையில்லை என்பதை சுமந்திரன் அவருக்கு எடுத்துக் கூறுவார்.
நிருபர்- நாசமாய் போச்சு!
குறிப்பு- யாவும் கற்பனை அல்ல

No comments:

Post a Comment