Friday, January 19, 2018

•இலங்கை அரசு கனடாவில் கண்டுபிடித்த "கருங்காலி"தான் டேவிட் பூபாலபிள்ளையா?

•இலங்கை அரசு கனடாவில் கண்டுபிடித்த
"கருங்காலி"தான் டேவிட் பூபாலபிள்ளையா?
ஒரு அடர்ந்த காட்டில் ஓங்கி வளர்ந்த மரங்கள் இருந்தன. ஒருநாள் அவற்றை வெட்டுவதற்காக ஒரு வேடன் வந்தான்.
வந்தவன் கையில் இரும்புபிடி போட்ட கோடரி இருந்தமையைக் கண்ட ஒரு மரம் மற்ற மரங்களைப் பார்த்து கூறியது “ நாம் அஞ்ச வேண்டியதில்லை. வேடனால் இன்று எம்மை வெட்டமுடியாது” என்றதாம்.
அடுத்தநாளும் அந்த வேடன் வந்தான். ஆனால் இம்முறை அவன் கையில் கருங்காலி பிடி போட்ட கோடரி இருந்தது. அதைப் பார்த்த மரம் கூறியது” இன்று நாம் அழிவது உறுதி. ஏனென்றால் எம்மில் ஒருவன் பக்கம் மாறிவிட்டான். எமக்கு துரோகம் செய்துவிட்டான்” என்றது.
ஆம். அதனால்தான் மனித இனத்தில்; பக்கம்மாறி துரோகம் செய்வோரையும் “கருங்காலி” “கோடரிக்காம்பு” என்று அழைக்கப்படுகிறது.
இலங்கை அரசு கனடாவில் கண்டுபிடித்த கருங்காலியாக டேவிட் பூபாலபிள்ளை மாறியுள்ளார். அவர் கனடா தமிழினத்தின் கோடரிக்காம்பாக செயற்படுகிறார்.
இன்று இலங்கை அரசுமீது ஓரளவு சர்வதேச அழுத்தம் இருக்கிறதுதென்றால் அதற்கு புலம்பெயர் தமிழர்களின் போராட்டமே காரணமாகும்.
கனடாவின் அழுத்தத்தை குறைக்கவும் கனடா வாழ் தமிழ் மக்களின் போராட்டத்தை சீர்குலைக்கவும் விரும்பிய இலங்கை அரசு டேவிட் பூபாலபிள்ளையை தெரிவு செய்துள்ளது.
ரூபவாகினி வரும் முன்னே மங்கள சமரவீர வருவார் பின்னே என்பது போல் முதலில் பொங்கல் விழாவிற்கு ரூபவாகினியை அழைத்துவரும் பணியை டேவிட்பூபாலபிள்ளை செய்து வருகிறார்.
அதன்பின் நிதியமைச்சர் மங்களசமரவீரவை வரவழைக்கும் பணியையும் அவர் செய்ய உள்ளார் என அறியவருகிறது.
அடிமைநாய்களுக்கு இறைச்சித்துண்டை வீசினால் நன்றாக வாலாட்டும் என்பது எஜமானர்களுக்கு நன்கு தெரியும்.
ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவெனில் இலங்கை அரசு பூபாலபிள்ளைக்கு வீசி எறிந்த அந்த இறைச்சித்துண்டு என்ன என்பதே?
ஏனெறால் அவர் இந்தளவு விசுவாசமாக இலங்கை அரச எஜமானர்களுக்கு வாலாட்டுவது பிரமிப்பு ஊட்டுகிறது!

No comments:

Post a Comment