Friday, January 19, 2018

•சம்பந்தர் அய்யாவின் “ஏக்கிய ராஜ்ஜிய” பொங்கல்!

•சம்பந்தர் அய்யாவின் “ஏக்கிய ராஜ்ஜிய” பொங்கல்!
தமிழ்மக்களுக்கு
தைப் பொங்கல் இருக்கிறது
மாட்டுப் பொங்கல் இருக்கிறது
காணும் பொங்கல்கூட இருக்கிறது.
இப்பொழுது சம்பந்தர் அய்யா தமிழ் மக்களுக்கு வழங்கும் பொங்கல்தான் “ஏக்கிய ராஜ்ஜிய” பொங்கல் ஆகும்.
ஒவ்வொரு பொங்கலுக்கும் சம்பந்தர் அய்யாவின் அறிக்கை வரும். ஆனால் அவர்கூறும் தீர்வு மட்டும் வராது.
சம்பந்தர் அய்யாவுக்கு நீண்ட காலமாக பாதுகாப்பு பொறுப்பதிகாரியாக இருப்பவர் ஒரு சிங்களவர்.
இந்த அதிகாரியின் சகோதரி சுபசிங்கா என்பவரே சம்பந்தர் அய்யாவின் பாராளுமன்ற செயலாளராக இருக்கின்றார்.
இந்த சிங்கள பெண்மணியே சம்பந்தர் அய்யா யாரை சந்திக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றார்.
இவருக்கு தமிழ் தெரியாது. அதனால் சம்பந்தர் அய்யாவை சந்திக்க தமிழ் மக்கள் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.
எத்தனையோ தமிழ் அதிகாரிகள் இருக்க, சம்பந்தர் அய்யா ஏன் சிங்கள அதிகாரியை வைத்திருக்கின்றார் என்பது புரியவில்லை?
அதுமட்டுமன்றி சம்பந்தர் அய்யாவின் தொடர்பாளராக சுதர்மன் என்ற பொறியிலாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
சம்பந்தர் அய்யாவின் மகனுக்கு திருமலையில் இலவசமாக வீடு கட்டிக் கொடுத்தமையினால் இந்தப் பொறியிலாளருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
கிடைத்த பதவியைக்கூட தமிழ் மக்களின் நலனுக்கு பயன்படுத்தாத சம்பந்தர் அய்யா கூறுகிறார் “ உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறாவிட்டால் தீர்வு வராது” என்று.
பாவம் தமிழ் மக்கள். இன்னுமா இவர்களை நம்புவது?

No comments:

Post a Comment