Wednesday, January 31, 2018

•ஆண்டாளுக்காக பொங்கியவர்கள் தமிழ்தாய்க்காக பொங்குவார்களா?

•ஆண்டாளுக்காக பொங்கியவர்கள்
தமிழ்தாய்க்காக பொங்குவார்களா?
ஆண்டாளுக்காக பொங்கியெழுந்த எச்ச.ராசா ஏன் இன்னும் தமிழ்தாய்க்காக பொங்கியெழவில்லை?
வைரமுத்துவை “வேசிமகன்” என்று ஏசிய எச்ச.ராசா விஜேந்திர சங்கராச்சாரியை “வேசிமகன் என்று ஏன் ஏசவில்லை?
விஜேந்திரரின் உண்மையான பெயர் ஜேசப் விஜய் என்று ஏன் இன்னும் அவர் கண்டுபிடிக்கவில்லை?
விஜேந்திரர் மன்னிப்பு கேட்காவிடில் தெருவில் அவர் தலை உருளும் என்றோ அல்லது தான் தீக்குளிப்பேன் என்றோ ஏன் அறிக்கை விடவில்லை?
ஆண்டாளுக்காக குரல் கொடுத்த நித்தியானந்தாவின் சீடர்கள் ஏன் தமிழ்தாய்க்காக இன்னும் குரல் கொடுக்கவில்லை?
வைரமுத்து தன் தாய்க்குத்தான் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்ட இவர்கள், விஜேந்திரர் பிறப்பிற்கு ஏன் இன்னும் ஆதாரம் கேட்கவில்லை?
வைரமுத்து ஆம்பிளைதானா என்பதை வந்து நிரூபிக்கும்படி கேட்டு வீடியோ விட்ட இவர்கள் விஜேந்திரருக்கு ஏன் இன்னும் வீடியோ விடவில்லை?
வைரமுத்துவை கெட்ட வாhத்தைகளால் திட்டி பதிவு போட்ட இவர்களால் ஏன் சங்கராச்சாரியாரை திட்டி பதிவு போட முடியவில்லை?
ஏனெனில் சங்கராச்சாரியார் பார்ப்பனர் என்பதைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
தமிழ்தாய்க்கு மரியாதை கொடுக்க மறுக்கும் இவர்களை தமிழ்நாட்டைவிட்டு விரட்டியடிக்க வேண்டும்!

No comments:

Post a Comment