Wednesday, January 31, 2018

•ரவுடி, சாமியார் ஆகலாம் ஆனால் சாமியார் ரவுடி ஆகலாமா?

•ரவுடி, சாமியார் ஆகலாம்
ஆனால் சாமியார் ரவுடி ஆகலாமா?
ஆம். ஆகலாம் என்கிறார் ஜீயர் சுவாமிகள். தங்களாலும் கல் எறிய முடியும். சோடா பாட்டில் வீச முடியும் என்கிறார்.
உண்மைதான். ஆனால் அவர் இன்னும் சில விடயங்களை கூறாமல் விட்டுவிட்டார்.
வேட்டியை மடிச்சு கட்டினால் தானும் ரவுடிதான் என்றார் எச்ச ராசா.
ஆனால் வேட்டியை மடிச்சுக் கட்டாமலே தாங்கள் ரவுடி என்கிறார் ஜீயர் சுவாமிகள்.
காஞ்சிபுரத்தில் ஒரு சாமியார் சங்கரராமனைக் கொலை செய்தார்.
அதே காஞ்சிபுரத்தில் ஒரு சாமியார் கர்ப்பக்கிரகத்தில் மேட்டர் (சல்சா) பண்ணினார்.
வட இந்தியாவில் ஒரு பெண் சாமியாரே வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியா முழுவதும் 66 சாமியார்கள் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சாமி அல்ல, ஆசாமிகள் என்று தொடர்ந்து நாம் கூறி வருகிறோம்.
அது உண்மைதான் என்று இப்ப அவர்களே தமது வாயால் ஒத்துக்கொள்கின்றனர்.
ஆனால் இங்கு எமது சந்தேகம் என்னவெனில், இறைநம்பிக்கை;கு எதிராக யார் பேசினாலும் இனி பொறுமை காக்க மாட்டோம் என இந்த ஜீயா சாமியார் எச்சரிக்கிறார்.
இவர்கள் தமது இறைவன் எல்லாம் வல்லவன் என்கிறார்கள். அப்படியென்றால் தனக்கு எதிராக பேசுபவர்களை அந்த இறைவன் தண்டிப்பார்தானே?
இவர்கள் எதற்கு தண்டனை கொடுக்க முற்படவேண்டும்?
அப்படியென்றால் இவர்களுக்கே தமது இறைவன் மேல் நம்பிக்கை இல்லையா?
உண்மை என்னவெனில,; இறைவன் ஒருவன் இருந்தால் அவனிடம் முதல் தண்டனை பெறுபவர்கள் இவர்களாகவே இருப்பர்.
ஆனால் இவர்களுக்கு ஒரு விடயத்தை கூறவேண்டும், ஒரு வேலையும் செய்யாமல் குந்தியிருந்து ஓசிச் சோறு சாப்பிடும் உங்களுக்கே இந்தளவு தெனாவெட்டு இருக்குமென்றால் உழைத்து சாப்பிடும் தமிழனுக்கு எந்தளவு இருக்கும்?
கவனம். மண்டை பத்திரம்!

No comments:

Post a Comment