Wednesday, January 31, 2018

•யாழ் இந்திய தூதுவரும் நாய்க்குட்டி தலைவர்களும்!

•யாழ் இந்திய தூதுவரும்
நாய்க்குட்டி தலைவர்களும்!
நாய்க்குட்டிகளில் பலவகை இருந்தாலும் அவையாவும் பிஸ்கட் துண்டு போடும் எஜமானுக்கு நன்றியுடன் வாலாட்டும்.
அதேபோல், பிஸ்கட் துண்டுபோட்டால் ஈழத்து நாய்க்குட்டி தலைவர்கள் ஓடி வருவார்கள் என்பது யாழ் இந்திய தூதருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
இதற்காகவே, இந்திய குடியரசு தினத்தை ஒட்டி யாழ் இந்திய தூதர் ஓட்டலில் விருந்து வைத்தார்.
இந்திய தூதரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. பல நாய்க்குட்டி தலைவர்கள் நன்றியுடன் கலந்து கொண்டு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நாய்க்குட்டி தலைவர்களுக்கு,
இந்திய ராணுவம் செய்த கொலைகள் மறந்து போயிருக்கலாம்.
இந்திய ராணுவம் செய்த பாலியல் வல்லுறவுகள் மறந்து போயிருக்கலாம்.
இந்தியா முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு செய்த உதவிகள் மறந்துபோயிருக்கலாம்.
இந்தியா ஈழத் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் ஆக்கிரமித்திருப்பது பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அகக்குறைந்தது,
இன்றும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்யுமாறு கோருவதற்கு இவர்களுக்கு ஏன் தோன்றவில்லை?
இன்றும் தமிழக அகதிமுகாம்களில் துன்பப்படும் ஈழ அகதிகளுக்கு உதவுமாறு ஏன் இவர்களால் யாழ் இந்திய தூதரிடம் கோர முடியவில்லை?
இதைக்கூட கோர முடியாத அளவுக்கு இந்த தலைவர்களுக்கு இந்திய விசுவாசம் இருக்கின்றதா?
யாழ் இந்திய தூதரின் விருந்தில் கலந்துகொண்டதுகூட பரவாயில்லை,
யாழ் இந்திய தூதரிடம் ஈழ அகதிகள் குறித்து கேட்காததுகூட பரவாயில்லை,
ஆனால் யாழ் இந்திய தூதருடன் விருந்து உண்ணும் படங்களை கொஞ்சம்கூட கூச்சமின்றி எப்படி உங்கள் முகநூலில் பகிர முடிகிறது?
தூ… நாய்களா! இதைவிட கூட்டிக் கொடுக்கிற மாமா வேலையை பார்க்கலாமடா?
பி.கு- தயவுசெய்து நாய்க்குட்டிகளை கேவலப்படுத்திவிட்டதாக யாரும் வருத்தப்பட வேண்டாம்.

No comments:

Post a Comment