Sunday, April 29, 2018

மாவோயிஸ்டுகள் என்னும் பேரில் 34 பேர் சுட்டுக்கொலை!

மாவோயிஸ்டுகள் என்னும் பேரில் 34 பேர் சுட்டுக்கொலை!
மராட்டிய மாநிலத்தில் கட்ச்ரோலி மாவட்டத்தில் இந்திய பாதுகாப்பு படையினரால் போலி மோதலில் 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸ்மீரில் இந்திய பாதுகாப்புடையினரால் சுட்டுக்கொல்லப்படுவொருக்காக குரல் கொடுக்கும் மனிதவுரிமை அமைப்புகள்கூட மாவோயிஸ்டுகள் கொல்லப்படும்போது குரல் கொடுப்பதில்லை.
மாவோயிஸ்டுகள் பயங்கரவாதிகள் என்றும் அதனால் சுட்டுக்கொல்வதாக இந்திய பாதுகாப்பு படைகள் கூறுகின்றன.
ஆனால் மாவோயிஸ்டுகள் என்பதற்காக கைது செய்யக்கூடாது. அவர்கள் மீது வழக்கு போடக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறுகின்றது.
ஒருவர் தவறு செய்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்தின் மூலமே தண்டிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுகின்றது.
ஆனால் இந்திய பாதுகாப்புடையோ அதன் உயர்நீதிமன்ற உத்தரவையும் கண்டு கொள்வதில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தையும் மதிப்பதில்லை. தொடர்ந்து சுட்டுக் கொன்ற வண்ணம் உள்ளது.
இந்திய பாதுகாப்பு படையின் இந்த அநியாயத்தை மனிதவுரிமை அமைப்புகளும் கண்டிப்பதில்லை. பத்திரிகைகளும் வெளிப்படுத்துவதில்லை.
காட்டில் இருக்கும் பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதியான கனிம வளங்களை அந்நிய ஏகாதிபத்திய கம்பனிகளுக்கு தாரை வார்க்க இந்திய அரசு முயல்கிறது.
அதற்கு இடங்கொடாமல் மாவோயிஸ்டுகளும் பழங்குடி மக்களும் போராடுகிறார்கள்.
அதனால்தான் இந்திய பாதுகாப்பு படைகள் மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி அப்பாவி பழங்குடி மக்களை போலி மோதலில் சுட்டுக் கொல்கின்றன.
இன்று மாவோயிஸ்டுகள் 6 மாநிலங்களில் 120 மாவட்டகளுக்கு மேல் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட, இந்திய அரசுக்கு போட்டியாக ஒரு அரசை நடத்துகின்ற, மாவோயிஸ்டுகளை ஒருபோதும் கொன்று அழிக்க முடியாது.
மக்கள் அதரவு கொண்ட அவர்கள் விரைவில் வெற்றி பெறுவார்கள்!

No comments:

Post a Comment