Monday, April 23, 2018

ஜனாதிபதி அங்கிள்!

ஜனாதிபதி அங்கிள்!
வருடப்பிறப்புக்கு முன்னர் அப்பா வருவார் என்றீர்களே
வருடம் பிறந்துவிட்டது. ஆனால் அப்பா வரவில்லையே?
குழந்தைகள் என்றால் நீங்கள் இரங்குவீர்கள் என்றார்களே
ஆனால் நீங்கள் எங்களுக்கு இரங்கவில்லையே?
குழந்தையானாலும் அது தமிழ் என்றால் இரங்கமாட்டீர்கள் போலும்
தான் விரும்பிய ஆளுனர் வேண்டும் என்பதற்காக
உங்களுடன் பேசிய சுமந்திரன் அங்கிளுக்குகூட
எங்களுக்காக பேச வேண்டும் என்று தோன்றவில்லையே
என்ன செய்வது? கடவுள்கூட எங்களை கைவிட்டுவிட்டாரே!

No comments:

Post a Comment