Monday, April 23, 2018

மக்கள் போராட துணிந்துவிட்டால்

மக்கள் போராட துணிந்துவிட்டால் ஓடும் விமானத்தை கல்லால் எறிந்து விழுத்துவார்கள் - பிடல் காஸ்ரோ
உண்மைதான். ஓடும் பேருந்தை தனி ஒருவராக தடுத்து நிறுத்துகிறார் ஒரு தமிழ்தாய்.
தமிழ்நாட்டில் ஒரு பெருமை மிக்க வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
காவிரிக்கான தமிழக மக்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவம் எடுத்துக்கொண்டிருக்கிறது.
இதுவரை அடையாள போராட்டமாக இருந்துவந்த காவிரிப் போராட்டம் டோல்கேட் உடைப்புடன் புதிய வடிவம் பெறுகிறது.
எதிரிக்கு எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடிக்க ஆரம்பித்துள்ளார்கள் தமிழக மக்கள்.
இப்போது ஒவ்வொரு தமிழன் முன் உள்ள கேள்வி என்னவெனில் நீயும் பொராட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறாயா அல்லது அடிமையாக கிடந்து சாகப் போகிறாயா என்பதே.
ஆனால் தாம் அடிமையாக இனியும் இருக்க மாட்டோம் என்பதை இந்த வீரத் தாய் உலகிற்கு காட்டிவிட்டார்.
போராட்டம் ஒரு போதும் தோல்வியைத் தருவதில்லை. காவிரிக்கான தமிழக மக்களின் போராட்டம் வெற்றி பெறாமல் ஓயப்போவதில்லை.
வாழ்த்துக்கள் தமிழக மக்களே!

No comments:

Post a Comment