Monday, April 23, 2018

சில வேளைகளில் எழுதும் பேனாக்களைவிட

சில வேளைகளில் எழுதும் பேனாக்களைவிட
எறியப்படும் கற்கள் வலிமையானவை என்பதை
சில ஊடகவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.
பேனாவினால் மட்டுமன்றி 
கற்களாலும் செருப்புகளாலும்
தங்களால் பேச முடியும் என்று
ஊடகவியலாளர் காட்டியுள்ளனர்.
ஆனால் சில பச்சோந்திகள்
கல் எறிந்தது சரியா தவறா என
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் ஒரு உண்மையை உணர வேண்டும்.
முதல் கல் எறியப்பட்டுவிட்டது
அது நாய் சேகர் ஓடி ஒளிந்து
மன்னிப்பு கேட்கும் அளவிற்கு
வலியைக் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment