Monday, April 23, 2018

இங்கே ஒரு வயதானவர் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு

இங்கே ஒரு வயதானவர் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு
எட்டிப் பார்க்கிறாரே, அவர் யார் என்று தெரிகிறதா?
ஏதோ பொங்கல் வாங்கச் சென்றுள்ளார் என்று நினைத்து விடாதீர்கள்.
அவர் தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கச் சென்றுள்ளார் என்று
நாளை அவர் சிஷ்யன் பத்திரிகைகளுக்கு பேட்டி குடுப்பார் நம்புங்கள்.
தமிழ் மக்களை சந்திக்க வருவதென்றால் இந்த வயதானவரை நாலுபேர்
தாங்கி பிடித்து வரவேண்டும்.
ஆனால் ஜனாதிபதியை சந்திக்கவென்றால் யாரும் துணைக்கு தேவையில்லை. அவர் தனியாகவே சென்றுவிடுவார்.
அதுவும் இந்திய தூதரின் விருந்தென்றால் பரவசத்துடன் குதித்துச் செல்வார்.
ஏனோ தெரியவில்லை. தமிழ் மக்கள் குறைகள் சொன்னால் அவருக்கு காது கேட்பதில்லை. கண் தெரிவதில்லை.
ஆனால் சந்திரிக்கா அம்மையாக் குசு குசுத்தால்கூட அவருக்கு தெளிவாக கேட்டு விடுகிறது.
தமிழ் இளைஞர்கள் போய் இவரிடம் வேலை பெற்று தரும்படி கேட்டால் அப்புறம் தீர்வு கேட்க முடியாமல் போய்விடும் என்பார்.
ஆனால் அவரோ கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தனக்கு இரண்டு சொகுசு பங்களா 6 சொகுசு வாகனம் கேட்டு பெறுவார்.
ஜனாதிபதியின் பங்களாவில் தனக்கு முன் சிறு குழந்தைகள் இருப்பதை பார்த்தபோதாவது கிளிநொச்சியில் இரு குழந்தைகள் தந்தையை எதிர்பார்த்து இருப்பது அவருக்கு நினைவுக்கு வரவில்லை.
உறுதியளித்தபடி தந்தையை ஏன் சிறையில் இருந்து விடுதலை செய்யவில்லை என்றையாவது ஜனதிபதியிடம் இவர் கேட்டிருக்கலாம்.
இதைக்கூட கேட்க முடியாத இவருக்கு என்ன ம—க்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?

No comments:

Post a Comment