Sunday, April 29, 2018

போராட்ட அறிக்கைகள் வரும் முன்னே தேர்தல் வரும் பின்னே !!

போராட்ட
அறிக்கைகள் வரும் முன்னே
தேர்தல் வரும் பின்னே !!
தீர்வுக்காக எதையும் செய்ய தயார் என்று சம்பந்தர் அய்யா அறிக்கை விடுகிறார்.
தீர்வு தராவிடில் தமிழர் தாயகம் எங்கும் அரச நிர்வாகத்தை முடக்குவோம் என்று சுமந்திரன் மிரட்டுகிறார்
இந்த ஆண்டு இறுத்திக்குள் சுயநிர்ணய உரிமை வழங்காவிடில் போராட்டம் வெடிக்கும் என்று மாவை சோனாதிராசா கூறுகிறார்.
இத்தனை நாளும் எதுவும் பேசாமல் இருந்தவர்கள் இப்போது திடீரென்று என் இவர்கள்; இப்படி அறிக்கை விடுகின்றனர்?
மாகாணசபைத் தேர்தல் விரைவில் வர இருப்பதால்தான் இவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக இப்படி அறிக்கை விடுகின்றனர் என சிலர் கூறுகின்றனர்.
தற்போதைய முதல்வர் விக்கி பிரிந்து தனி அணி அமைக்கப்போவதால் அதனைச் சமாளிப்பதற்காக போராட்ட அறிக்கைகளை விடுகின்றனர் என வேறு சிலர் கூறுகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகப்போகிறது. எனவேதான் இப்படி அறிக்கைவிட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகளை மிரட்ட முயலுகின்றனர் என இன்னும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் யாருமே இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காகவே இவ் அறிக்கைகளை விடுவதாக கூறவும் இல்லை. நம்பவும் இல்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இனி இவர்களின் அறிக்கைகளை நம்பி ஏமாற தயாரில்லை.

No comments:

Post a Comment