Monday, April 23, 2018

காவிரியில் தண்ணீர் தரமுடியாது

காவிரியில் தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசால் சொல்ல முடியுமென்றால் நெய்வேலியில் இருந்து மின்சாரம் தர முடியாது என்று ஏன் தமிழக அரசால் கூறமுடியாது?
தண்ணிர் தராத கர்நாடகத்தை “தேசவிரோதிகள்” என்று கூறமுடியாதவர்கள் நெய்வேலி மின்சாரத்தை மறிக்க முனையும் தமிழர்களை மட்டும் தேசவிரோதிகள் என்று எப்படி கூறமுடியும்?
கர்நாடகத்தில் தமிழன் தாக்கப்படுவதை “வன்முறை” என்று கூறாதவர்கள் தமிழ்நாட்டில் டோல்கேட்டை தாக்கினால் வன்முறை என்று ஒப்பாரி வைப்பது ஏன்?
போராடாத இனம் விடுதலை பெற்றதில்லை
போராடிய இனம் விடுதலை பெறாமல் விட்டதில்லை.
தண்ணியை விடு அல்லது தனியா விடு

No comments:

Post a Comment