Monday, April 23, 2018

ஜனநாயக இந்தியாவில் பாடுவதற்கும்

ஜனநாயக இந்தியாவில் பாடுவதற்கும்
தமிழனுக்கு உரிமை இல்லையா?
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள்.
இங்கு எழுத்து சுதந்திரம் உண்டு என்கிறார்கள்
இங்கு பேச்சு சுதந்திரம் உண்டு என்கிறார்கள்
இங்கு கருத்துச் சுதந்திரம் உண்டு என்கிறார்கள்
அப்புறம் ஏன்டா பாட்டுப் பாடின கோவனை
பிடித்து சிறையில் அடைக்க முயல்கிறீர்கள்?
நீங்கள் கொலை செய்யலாம்
நீங்கள் கொள்ளையடிக்கலாம்
நீங்கள் எட்டு வயது சிறுமியை
பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யலாம்.
நீங்கள் மக்களை ஏமாற்றலாம்
ஆனால் மக்களில் ஒருவன் கோவன்
அது குறித்து பாடக்கூடாதா?
என்னடா நியாயம் இது?
ஹிட்லர்கூட இந்தளவு சர்வாதிகாரம் செய்யவில்லையே?
ஆனானப்பட்ட அந்த ஹிட்லரையே
தூக்கியெறிந்த உலகமடா இது.
அடங்குங்கடா!

No comments:

Post a Comment