Monday, April 23, 2018

•இவர்கள் தமிழினத்தின் சாபக்கேடுகள்!

•இவர்கள் தமிழினத்தின் சாபக்கேடுகள்!
மீண்டும் தமக்கு பதவி கிடைக்காது என்பதால் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடிக்கு முடிந்த கொள்ளையை அடிப்பதிலேயே இவர்கள் கவனம் உள்ளது.
தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக மோடி அரசிற்கு ஆதரவாக தமிழ் மக்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து வருகின்றனர் இவர்கள்.
கர்நாடகத்தில் எந்த அரசு இருந்தாலும் காவிரிக்காக அவர்கள் மத்திய அரசை மிரட்டி காரியம் சாதிக்கின்றனர்.
ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசிற்காக மக்களை மிரட்டி வருகிறது.
காவிரி ஆணையம் அமைக்காவிடின் தமிழக எம்.பி க்கள் தற்கொலை செய்வோம் என்றார்கள். இப்போது உண்ணாவிரதம் இருப்போம் என்கிறார்கள்.
ஆனால் அதிலும்கூட முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் கலந்து கொள்ளமாட்டார்களாம்.
எம்.பி பதவி முடிய இன்னும் சில காலமே உள்ளது. இருந்தாலும்கூட தமிழ் மக்களுக்காக தமது பதவியை ராஜினாமா செய்ய ஒரு எம்.பி யும் தயாரில்லை.
இவர்கள் தாங்களும் போராட மாட்டார்கள். போராட முன்வருபவர்களையும் விடமாட்டார்கள். உடனே கைது செய்து சிறையில் அடைப்பார்கள்.
மெரினாவில் சில மாணவர்கள் போராட முனைந்தார்கள். உடனே ஓடிச்சென்று அவர்களை கைது செய்தார்கள்.
கும்பகோணத்தில் ஒரு ஆசிரியர் தேசியக் கொடியை எரித்தார். உடனே தனிப்படை அமைத்து அவரை கைது செய்து விட்டார்கள்.
வேல்முருகன் டோல்கேட்டை உடைத்தார். உடனே அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.
தந்தைபெரியார் திராவிடக் கழகத்தினர் ரயில் மறியல் செய்ய முனைந்தார்கள். அவர்களையும் கைது செய்து விட்டார்கள்.
உணர்வுள்ள தனிநபர்கள் போராடுகிறார்கள். சில நூறு தொண்டர்களை உடைய கட்சிகள்கூட போராடுகின்றன.
ஆனால் ஒரு கோடி தொண்டர்கள் உள்ள கட்சி என்று பெருமை பேசும் திமுக 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது. 12 மணிக்கு சாலை மறியல் செய்து கைதாகிறது. 1 மணிக்கு விடுதலையாகி வீடு சென்றுவிட்டது.
யப்பா! புல்லரிக்கிறது. இப்படி போராட்டம் நடத்தினால் எப்படி மத்திய அரசு பயப்பிடும்? எப்படி காவிரி கிடைக்கும்?

No comments:

Post a Comment