Monday, April 23, 2018

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
போராடாத எந்த இனமும் விடுதலை பெற்றதில்லை
போராடிய எந்த இனமும் விடுதலை பெறாமல் விட்டதில்லை
உலகில் உள்ள தமிழன் எல்லாம் ஒன்று சேர்ந்து காவிரிக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.
•மலேசியாவில் தமிழர்கள் காவிரிக்காக குரல் கொடுத்துள்ளனர்.
•கனடா அமெரிக்காவில் குரல் கொடுத்துள்ளனர்.
•14ம் திகதி லண்டனில் குரல் கொடுக்க உள்ளனர்.
தமிழக மக்களுக்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் குரல் கொடுக்கின்றனர்.
கடந்த வருடம் ஜல்லிக்கட்டுக்காக உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தனர்.
இந்த வருடம்; காவிரிக்காக தமிழ் மக்கள் ஒன்று சேருகின்றனர்.
இது வெறும் காவிரிக்காக மட்டும் சேரும் கூட்டம் இல்லை.
இது தமிழன் ஒன்று சேர்ந்து போராடுவான் என்பதை காட்டும் கூட்டம்.
இது எமது எதிரிகளுக்கு ஒரு செய்தியை தெளிவாக சொல்லுகிறது
இனி தமிழன் அடிமையாக அடங்கி கிடக்க மாட்டான் என்பதே.

No comments:

Post a Comment