Monday, April 23, 2018

கடந்த வருடம் திலீபன் என்பவர்

கடந்த வருடம் திலீபன் என்பவர் தேசியக் கொடியைக் கொளுத்தி தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
உடனே அவரைக் கைது செய்;து அவர் கையை முறித்து சிறையில் அடைத்தார்கள்.
இப்போது இன்னொருவர் தேசியக் கொடியை கொளுத்தி தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவரும் கைது செய்யப்பட்டு கை உடைக்கப்படலாம் அல்லது குண்டர் சட்டத்தில் அடைக்கப்படலாம்.
ஆனால் அண்மையில் நாகலாந்தில் ஒரு பெண் தேசியக் கொடியை எரித்து அதனை தைரியமாக ஊடகங்களில் வெளிப்படுத்தினார்.
அரசு அவரைக் கைது செய்யவும் இல்லை. கையை உடைக்கவும் இல்லை.
காஷ்மீர், நாகலாந்து போல் தமிழகத்திலும் தேசியக் கொடி எரிக்கப்படும் நிலை ஏற்பட்டமைக்கு அரசே காரணம்.
காவிரி ஆணையம் அமைக்காதது மட்டுமன்றி அதற்காக போராடுவதையும் அரசு தடுக்கிறது.
சென்னை மெரினாவில் காவிரி உரிமை கோரி போராடியவர்களை பொலிஸ் தடுத்து கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் தமிழனுக்கு போராடுவதற்குகூட உரிமை இல்லை எனில் அவன் தேசியக்கொடியை கொளுத்தாமல் கோமணத்தையா கொளுத்துவான்?

1 comment:

  1. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete