Monday, April 23, 2018

மைத்திரியே திரும்பிப் போ!

•மைத்திரியே திரும்பிப் போ!
லண்டனில் மோடிக்கு அடுத்ததாக அதிகளவு எதிர்ப்பை
எதிர்கொண்ட தலைவர் இலங்கை ஜனாதிபதி மைத்திரியே!!
சம்பந்தரையும் சுமந்திரனையும் வாங்கிவிட்டால் தமிழ் மக்களின் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்த மைத்திரிக்கு லண்டன் தமிழர்கள் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளார்கள்.
பதவியையும் பணத்தையும் காட்டி தலைவர்களை வாங்கலாம். ஆனால் தம்மை வாங்க முடியாது என்பதை லண்டன் தமிழ் மக்கள் காட்டியுள்ளார்கள்.
ஆனாலும் மைத்திரிக்கு சிறிது ஆறுதல் கிடைத்துள்ளது எனலாம். இந்திய தேசியகொடி கிழித்தெறியப்பட்டதுபோன்று இலங்கை தேசியகொடி தமிழ் மக்களால் கிழித்தெறியப்படவில்லை.
மோடிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒளிபரப்பியது போன்று மைத்திரிக்கு எதிரான போராட்டங்களை BBC போன்ற ஊடகங்கள் ஒளிபரப்பு செய்யவில்லை.
எனினும் இனியும் “நல்லாட்சி அரசு” என்று இலங்கை அரசு ஏமாற்றிக்கொண்டு திரிய முடியாது என்பதை தமிழ் மக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
மக்கள் போராட்டம் வெற்றி பெற்றே தீரும்!

No comments:

Post a Comment