Friday, August 30, 2019

திருமாவளவனும் பிரபாகரனும்

•திருமாவளவனும் பிரபாகரனும்
லண்டனில் நேற்று நடந்த கூட்டத்தில் பிரபாகரன்தான் காங்கிரசுடன் கூட்டு வைக்கச் சொன்னார் என்று திருமாவளவன் பேசியதையிட்டு பலரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
எமக்கு இதில் எந்த அதிர்ச்சியும் இல்லை. மாறக ஆறுதலே. நல்ல வேளை, “எதியோப்பியாவில் இருந்து பிரபாகரன் தொலைபேசியில் கூறியதால்தான் கொழும்பு சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்தேன் கைகுலுக்கினேன். பரிசல்கள் பெற்று வந்தேன்” என்று கூறியிருந்தால் என்னாவது?
“உடனே சென்று கைகுலுக்குங்கள் . இல்லையேல் மகிந்த ராஜபக்ச கோபத்தில் இன்னும் 40 ஆயிரம் தமிழர்களை கொல்லப் போகிறாh” என்று பிரபாகரன் கூறியதும் உடனே விமானத்தில் கொழும்பு சென்று மகிந்த ராஜபக்சவின் கையை குலுக்கினேன் என்று திருமாவளன் கூறியிருந்தால் லண்டனில் நேற்று எத்தனை தமிழர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பார்கள்?
நல்லவேளை பலரின் உயிரை திருமா காப்பாற்றிவிட்டார்!

No comments:

Post a Comment