Friday, August 30, 2019

•மலையாளிகளின் தலைவரும் ஈழத் தமிழர்களின் தலைவரும்

•மலையாளிகளின் தலைவரும்
ஈழத் தமிழர்களின் தலைவரும்
இவர் கேரள முதலமைச்சர். வெள்ள அழிவுகளை நேரில் சென்று பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
இவர் விரும்பியிருந்தால் ஒரு அறிக்கையை பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு இருந்திருக்கலாம்.
அல்லது ஹெலிகெப்டரிலோ விமானத்திலோ சென்று பார்வையிட்டிருக்கலாம். மாறாக வெள்ளத்தில் இருக்கும் மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார்.
இவர் மக்களை சென்று பார்த்தது ஆச்சரியம் இல்லை. ஆனால் இவரின் வயது 75. அதுதான் ஆச்சரியம்.
எமக்கும் ஒரு தலைவர் இருக்கிறார். எப்போதும் அழ்ந்த உறக்கத்தில் இருப்பார்.
வெள்ளம் என்ன சுனாமியே வந்து மக்கள் அழிந்தாலும் வந்து பார்வையிட மாட்டார். கேட்டால் வயதாகி விட்டது முடியவில்லை என்பார்.
ஆனால் தேர்தல் அறிவித்தால் போதும் உடனே எழும்பி ஓடி வருவார். அடுத்த வருடம் தீர்வு சொல்லித் திரிவார்.
பாவம் தமிழ் மக்கள். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த தலைவரை பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறார்கள்?

No comments:

Post a Comment