Friday, August 30, 2019

செங்கொடியை நினைவில் கொள்வோம்!

•செங்கொடியை நினைவில் கொள்வோம்!
இவர்,
தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம்
ஆனால் இவரின் அர்ப்பணிப்பு குறித்து
யாருக்கும் விமர்சனம் இருக்க முடியாது.
மூன்று தமிழர் உயிர் காக்க
தன் உயிரைக் கொடு;த்தவர்
வாழ வேண்டி வயதில்
சாவை விரும்பி ஏற்றவர்.
தன் உடல் கருகி உயிர் போகும் நேரத்தில்கூட
தன்னைக் காப்பாற்றும்படி அவர் கோரவில்லை
தன் உடலை வைத்து 3 பேரின் உயிரையும்
காப்பாற்றும்படியே கேட்டார்.
அவர் அர்ப்பணிப்பு மகத்தானது.
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும்.
இது உறுதி!
குறிப்பு - இன்று செங்கொடியின் 8 வது நினைவு தினம் ஆகும் (28.08.2011)

No comments:

Post a Comment