Friday, August 30, 2019

•பார்வதி அம்மாள் !

•பார்வதி அம்மாள் !
பிரபாகரனின் தாயார். அவர் எந்த அரசியல் செயற்பாடும் கொண்டிருக்கவில்லை.
ஆனாலும் வயதான அந்த தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் தாயாரும் பயங்கரவாதி. அதனால் அவரையும் கைது செய்ததாக காரணம் சொன்னார்கள்.
அதெப்படி தாயாரை பயங்கரவாதி என்று கூறமுடியும்? என நாம் இங்கு கேட்க வரவில்லை.
நாம் கேட்க விரும்புவது அதேபோல் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவையும் பயங்கரவாதி என்றார்களே. ஆனால் அவருடைய தாய் தந்தையரை ஏன் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை?
அதையும்விட பிரபாகரனின் 12 வயது மகனைக்கூட பயங்கரவாதி என்று கொன்றார்கள். ஆனால் விஜேயவீராவின் 6 குழந்தைகளையும் பராமரித்து படிக்க வைத்தார்கள்.
ஆனால் கைது செய்த பிரபாகரனின் தாயாருக்கு உரிய மருத்துவ வசதிகூட வழங்காமல் அடைத்து வைத்திருந்தார்கள்.
இறுதியாக அந்த தாயார் சிகிச்சைக்காக சென்னை சென்றபோது கலைஞர் கருணாநிதி அவரை வயதான நோயாளி என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பினார்.
இத்தனை கொடுமைகளும் பார்வதி அம்மாள் ஒரு தமிழர் என்பதால்தானே நடைபெற்றது?
ஒருவேளை அவர் சிங்கள இனத்திலோ அல்லது வேறு இனத்திலோ பிறந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என கேள்வி எழுவது தவறா நண்பர்களே?
குறிப்பு – விஜேயவீராவின் குடும்பமும் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என நாம் கோரவில்லை. மாறாக பிரபாகரன் குடும்பம் கொல்லப்பட்டமைக்கு அவர்கள் தமிழர்கள் என்பதே காரணம் என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.
•நான் எழுப்பியுள்ள இந்த கேள்விக்கு முடியுமானால் இலங்கை இந்திய அரசின் விசுவாசிகள் பதில் தரட்டும். ஆனால் அதற்காக எனக்கு புலி முத்திரை குத்த வேண்டாம். ஏனெனில் அது எனது கேள்விக்கு உரிய பதில் இல்லை.

No comments:

Post a Comment