Friday, August 30, 2019

கரடியே காறித் துப்பி விட்டது.

•கரடியே காறித் துப்பி விட்டது.
மாவை சேனாதிராசாவுக்கு இது தேவையா?
மாவை சேனாதிராசா மீது எமக்கு விமர்சனம் உண்டுதான். ஆனால் அதற்காக நாமல் ராஜபக்ச எல்லாம் அவரை விமர்சிப்பதை எம்மால் தாங்க முடியவில்லை.
ஆனால் இந்த நிலைக்கு நாமல் ராஜபக்ச காரணம் இல்லை. மாவை சேனாதிராசாவே முழுக் காரணமாகும்.
மாவை சேனாதிராசாவுக்கு வெட்கம் மானம் ரோசம் எதுவும் இல்லைதான். இருந்திருந்தால் நாமல் ராஜபக்சவின் அறிக்கையை படித்ததும் தூக்கு போட்டு செத்திருப்பார்.
மாவை நாமலுக்கு வரலாறு தெரியாது என்றார். ஆனால் நாமலோ இவரின் மகனுக்கு ஒழுங்கா தமிழ் தெரியாது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல மாவை தன் மகனை இந்தியாவில் மருத்துவம் படிப்பிக்கிறார். ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அக்கறை இல்லாமல் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாமல் ராஜபக்ச.
இதைவிட மாவிட்புர பங்களா, கொழும்பு பங்களா, சென்னை பங்களா எல்லாம் கூறியதுடன் இனி வாய் திறந்தால் இன்னும் வரும் என்று வேற மிரட்டியுள்ளார்.
போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் என்னென்னவெல்லாம் வரப் போகின்றது என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த தேர்தலில் மாவிட்டபுரத்திலேயே மாவையை எதிர்த்து நாமல் எலெக்சன் கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
மாவை மட்டுமல்ல சரவணபவன் சிறீதரன் எல்லோரையும் கிழித்து தொங்கவிட்டிருக்pறார் நாமல் ராஜபக்ச.
படிக்கும்போது மகிழ்ச்சி அடைய முடியவில்லை. தமிழ் இனத்திற்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என்று மனவருத்தம் ஏற்படுகிறது.
இனியாவது திருந்துங்கடா பிளீஸ்!
குறிப்பு – நாமல் ராஜபக்சா அறிக்கை கீழே இணைப்பில் தந்துள்ளேன்.
சம்பந்தர் ஐயா எழும்பி நிண்டு 72 நிமிடம் பேசியதை சாதனையாக எழுதியவர்கள் இதற்கும் ஏதாவது பதில் எழுதுங்கள்.

No comments:

Post a Comment