Friday, August 30, 2019

இலங்கை அரசே! டாக்டர் சிவரூபனை உடனே விடுதலை செய்!

•இலங்கை அரசே!
டாக்டர் சிவரூபனை உடனே விடுதலை செய்!
சிவரூபன் மருத்துவர் மட்டுமன்றி பல இனப் படுகொலைகளின் கண்கண்ட சாட்சியாகவும் இருக்கிறார்.
எனவேதான் இலங்கை அரசு அவரை கைது செய்து மிரட்டுகிறது. அவர் இன்றி அவர் பணிபுரிந்த பளை மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.
அதுகுறித்து இலங்கை அரசுக்கும் கவலை இல்லை. தமிழ் தலைவர்களுக்கும் அக்கறை இல்லை.
மகிந்த ஆட்சியாக இருந்தாலும் சரி ரணில் ஆட்சியாக இருந்தாலும் சரி தமிழ் மக்கள் மீதூன அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் எமது தலைவர்கள் நடப்பது நல்லாட்சி அரசு என்கிறார்கள். இந்த நல்லாட்சி அரசுதான் ஏற்கனவே இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிசாரைக் கொன்றார்கள் என்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து அடைத்தார்கள்.
ஆனால் நல்லவேளை குண்டு வெடிப்பில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தால் அவ் இளைஞர்கள் பல மாதங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இல்லையேல் பத்து பதினைந்து வருடங்களாக அவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள்.
இப்போது மருத்துவர் சிவரூபனையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே கைது செய்திருக்கிறார்கள். அவரை எத்தனை வருடம் அடைத்து வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
இந்த பயங்கரவாத தடைச்சட்டமும் அவசரகாலச்சட்டமும் எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனே ஒவ்வொரு முறையும் நீடிக்கப்படுகின்றது என்பது எம்மில் எத்தனை பேர் அறிவார்கள்?

No comments:

Post a Comment