Friday, August 30, 2019

மாற்றம் ! நம்பிக்கை தரும் ஜேவிபி.

•மாற்றம் !
நம்பிக்கை தரும் ஜேவிபி.
சாராயம் இல்லை
பிரியாணி இல்லை
ஆனாலும் கூட்டம் வந்துள்ளது.
வேலை வழங்கப்படும் என கூறவில்லை
நிவாரணம் வழங்கப்படும் என்றுகூட கூறவில்லை
ஆனாலும் பல்லாயிரணக் கணக்கான மக்கள் கூட்டம்.
உண்மையில் இது ஆச்சரியம் மட்டும் அல்ல அதிசயமும்கூட.
எப்படி இது நிகழ்ந்தது?
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைவிட
வேறு என்ன காரணம் இருந்துவிட முடியும்?
அதேபோல் அவர்களும்
குட்டைப்பாவாடைக்கு அனுமதி இல்லை
அபாயா அணிந்து வந்தவர்களுக்கு அனுமதி என்று
முஸ்லிம் மக்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறார்கள்.
கூட்டத்தில் அனைத்திலும் தமிழ்மொழிக்கு இடம்
பாடிய பாட்டில்கூட தமிழ் மொழிக்கு இடம்
தமிழ் மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள்.
எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது
கூட்டம் முடிந்ததும் அவர்களே மைதானத்தை
சுத்தம் செய்துவிட்டு சென்றது
ஆம். நாட்டை தம்மிடம் ஒப்படைத்தால்
சுத்தமாக வைத்திருப்போம் என காட்டியிருக்கிறார்கள்
எனவே சிங்கள மக்கள் மனதில்
இவர்கள் இடம் பிடிப்பது ஆச்சரியம் இல்லை
ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால்
புத்த பிக்குகளை தாண்டி தமிழ் மக்களுக்கு
எப்படி என்ன தீர்வை வழங்குவோம் என்பதை
தெளிவாக கூறினால் மட்டுமே
தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியும்.

No comments:

Post a Comment