Friday, August 30, 2019

சிறு வயதில் அத்துளு வயலில் விளையாடிவிட்டு

சிறு வயதில் அத்துளு வயலில் விளையாடிவிட்டு வீடு திரும்பும்போது அங்கிருந்த வையிரவ கோயில் முருங்கை மரத்தில் தொங்கிய முருங்கைக்காய் பறித்து சென்று அம்மாவிடம் கொடுத்தேன்.
இது என்ன கெட்ட பழக்கம் என்று திட்டிய எனது அம்மா அதே முருங்கைக்காயால் எனக்கு அடித்துவிட்டு உடனே கொண்டுபோய் எடுத்த இடத்தில் போட்டுவிட்டு வா என்று அனுப்பினார்.
நானும் அழுதழுது சென்று அவற்றை வையிரவ கோயில் வாசலில் போட்டுவிட்டு வந்துவிட்டேன்.
ஆனால் இப்போது மோடியின் கதையைப் படித்ததும் எனக்கு சிறிது ஆறுதல். நல்லவேளை நான் முதலையைக் கொண்டு போகவில்லை. கொண்டு போயிருந்தால் ?
குறிப்பு - இதைப் படிப்பவர்களுக்கு எனது தாயார் போன்று மோடியின் தாயாரும் அடித்திருந்தால் ஒரு நல்ல பிரதமர் நாட்டுக்கு கிடைத்திருப்பார் என நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

No comments:

Post a Comment