Friday, August 30, 2019

தமிழர்களை முட்டாள்னு நினைச்சு

தமிழர்களை முட்டாள்னு நினைச்சு கதை சொன்னால்கூட பரவாயில்லை
தமிழர்களுக்கு மூளையே இல்லைன்னு நினைச்சு கதை சொல்கிறார்கள்
மாவை சேனாதிராசா அவர்களே!
நாமல் ராஜபக்சா நீங்கள் கூறியபடி கொலைகார மகிந்தவின் மகனாக இருக்கலாம்
நாமல் ராஜபக்சா நீங்கள் கூறியபடி “ சின்னப் பொடியன்” ஆக இருக்கலாம்.
அல்லது உங்கள் ஆதரவாளர்கள் கூறுவதுபோல் அவர் நடிகைகளுடன் திரிபவராகக்கூட இருக்கலாம்.
ஆனால் இவ்வாறு கூறுவது எல்லாம் நாமல் ராஜபக்சா கூறிய குற்றச்சாட்டுக்களுக்குரிய பதில் இல்லை.
நாமல் ராஜபக்சா என்னவாக இருந்தாலும் அவர் தனது இனத்திற்கு துரோகம் இழைத்ததாக ஒரு சிங்களவரும் இதுவரை கூறவில்லை.
அதுபோல் நீங்களும் உங்கள் இனமான தமிழ் இனத்திற்கு நேர்மையாக இருந்திருந்தால் இப்படி போறவன் வாறவன் எல்லாம் கேட்கும் நிலை வந்திருக்குமா?
இனப் படுகொலையாளிகளின் கதைகளை நம்ப வேண்டாம் என்று இப்போது கூறுகிறீர்கள்.
ஆனால் அதே இனப்படுகொலையாளியான பசில் ராஜபக்சவிடம் உங்கள் மகனுடன் நீங்கள் போய் சந்தித்து உதவி பெற்றதை அவர்கள் சொல்லி சிரிக்கின்றனரே?
இன்னும் என்னென்ன கதைகளை எல்லாம் அவர்கள் கூறப் போகிறார்களோ தெரியவில்லை.
உங்களுக்கு வெட்கம் வருகிறதோ இல்லையோ ஆனால் தமிழராக நாங்கள் வெட்கி தலை குனிகிறோம்.
நீங்கள் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்தாலும் பரவாயில்லை ஆனால் தமிழர்களுக்கு மூளையே இல்லை என்று நினைத்து கதை சொல்கிறீர்கள்.
ஆனால் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களைவிட மிகப் பெரிய தலைவர்களாக இருந்த ஜிஜி பொன்ம்பலம் அமிர்தலிங்கம் போன்றவர்களையே தமிழ் மக்கள் தேர்தலில் தோற்கடித்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment