Sunday, July 30, 2023

15 வருடங்கள் சிறையில் அடைத்து

15 வருடங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரியை சேர்ந்த சண்முகராசன் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த நவரட்ணம் ஆகிய இருவரும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிங்கள ஜனாதிபதிகூட இரக்கம் காட்டி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்கிறார். இந்திய அரசும் தமிழக திராவிட முதல்வரும் 33 வருடமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சாந்தன் மீது இரக்கம் காட்ட மறுப்பது என்? தான் இறப்பதற்கு முன்னர் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என ஏக்கத்துடன் காத்திருக்கும் சாந்தனின் தாயார் மீதாவது தமிழக முதல்வர் இரக்கம் காட்ட மாட்டாரா?

No comments:

Post a Comment