Sunday, July 30, 2023

ரணில் பதவிக்கு வந்து ஓராண்டு முடிந்துவிட்டது.

ரணில் பதவிக்கு வந்து ஓராண்டு முடிந்துவிட்டது. ரணிலை மாற்றியதாலும் எந்த பயனும் இல்லை என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எமது தமிழ் தலைவர்கள்தான் வழக்கம்போல் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் ஓடிப் போவதும் பின்னர் ஏமாற்றிவிட்டார்கள் என ஒப்பாரி வைப்பதுமாக இருக்கிறார்கள். ஜனாதிபதிகளை மாற்றுவதால் எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. தேவை முக மாற்றம் இல்லை. அமைப்பு மாற்றம். தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காவிடின் சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதை சிங்கள மக்களுக்கு உணர வைக்கும் தலைமை தேவை.

No comments:

Post a Comment