Saturday, July 15, 2023

செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர்

செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்களுக்கு “தமிழினத்தின் காவல் தலைவன்” என்ற சிறப்புப் பட்டத்தையும் செங்கோலும் 08-07-2023யன்று மன்னார் மக்கள் வழங்கிப் பெருமை சேர்த்துள்ளார்கள். சந்தேகம்! (1) மன்னார் மக்கள் என்ற பெயரில் சச்சிதானந்தம் அவர்களுக்கு பட்டமும் செங்கோலும் வழங்கியவர்கள் யார்? (2) ஆயுதம் ஏந்திப் போராடியவர்களுக்குகூட “தமிழினத்தின் காவல் தலைவன்” என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் சச்சிதானந்தம் அவர்களுக்கு எப்படி இந்த பட்டம் கொடுக்கப்பட்டது? (3) கடந்த வாரம் தமிழக ஆளுநர் பாராட்டியதாக படங்கள் வந்தன. இந்த வாரம் மன்னார் மக்கள் பாராட்டியதாக படங்கள் வந்துள்ளன. இவையாவும் சச்சிதானந்தம் அவர்கள் தனக்கு தானே செய்யும் பாராட்டு விழாக்களா அல்லது உண்மையான விழாக்களா? தாழ்மையான வேண்டுகோள் ! ஐயா! இது மொபைல்போன் காலம். செங்கோல் கவனம். வீடியோ கீடியோ எதிலும் மாட்டுப்பட்டுடாதையுங்கோ.

No comments:

Post a Comment