Saturday, July 15, 2023

1988ல் ஒருநாள் தோழர் பொழிலன்

1988ல் ஒருநாள் தோழர் பொழிலன் தமது இதழுக்கு படம் வரையும் கலைஞர் ஒருவரை சந்திக்க என்னையும் கூட அழைத்துச் சென்றார். சென்னையில் ஒரு சிறிய இடத்தில் அவர் இருந்தார். அவர் வீர சந்தானம் . தனது வித்திசாயமான படங்கள் மூலம் அப்போது அவர் பிரபலமாக வந்துகொண்டிருந்தார். குறிப்பாக அக் காலத்தில் முற்போக்கு சிற்றிதழ்களின் விருப்பத்துக்குரிய வரை கலைஞராக அவர் இருந்தார். மிகவும் குறைந்த விலையில் அதுவும் சில வேளைகளில் இலவசமாகவே படங்கள் வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தார். இதற்கு காரணம் அவர் தமிழ்நாடு விடுதலை மீதும் தமிழீழ விடுதலை மீதும் கொண்டிருந்த பற்றே. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைந்துள்ள கற்சிற்பங்களில் அவர் பங்கு அறிந்தபோது நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் இது அவர் குருதியில் கலந்த உணர்வு. அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

No comments:

Post a Comment