Sunday, July 30, 2023

இராஜசுந்தரம் அவர்கள் ஒரு டாக்டர்.

இராஜசுந்தரம் அவர்கள் ஒரு டாக்டர். அவருடைய மனைவியும் ஒரு டாக்டர். இவரும் விரும்பியிருந்தால் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு சென்று சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இராஜசுந்தரம் அவர்கள் காந்தியின் அகிம்சை கொள்கைகளில் நம்பிக்கை வைத்து காந்தியம் என்னும் அமைப்பை நிறுவி அதனூடாக மக்களுக்கு சேவை செய்தார். சுமார் 5000ற்கு மேற்பட்ட மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றினார். ஆனால் சிங்கள அரசு அவரை பயங்கரவாதி என முத்திரை குத்தி சிறையில் அடைத்தது 1983ம் ஆண்டு யூலை மாதம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை சிங்கள அரசு ஏவிவிட்ட காடையர் கொல்ல முயன்ற போது ராஜசுந்தரம் அவர்களுடன் அகிம்சை வழியில் பேச முயன்றார். அதற்கு அவர்கள் கொடுத்த பதில் இராஜசுந்தரத்தையே கொலை செய்து விட்டார்கள். காந்தியத்தை போதித்தவரை பயங்கரவாதி என்று கைது செய்து அடைத்தது மட்டுமன்றி அவரை சிறையில் கொலையும் செய்தது சிங்கள அரசு. கடவுள் புத்தரே வந்து தமிழருக்காக நியாயம் பேச முயன்றால் அவரையும் கொலை செய்வார்கள் இந்த வெறியர்கள். இவர்களின் இந்த வெறித்தனம் இன்றும் கொஞ்சம்கூட மாறவில்லை ஆனால் நம்மவர் சிலர் இவர்களிடமிருந்து அகிம்சை வழியில் தீர்வு பெறலாம் என கூறுகின்றனர். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment