Sunday, July 30, 2023

பௌத்த சிங்கள பேரினவாதமானது,

பௌத்த சிங்கள பேரினவாதமானது, தன் சட்டங்களையும் மதிப்பதில்லை தன் நீதிமன்றங்களையும் மதிப்பதில்லை பிற மதத்தவரின் நம்பிக்கைகளையும் அது மதிப்பதில்லை நீதிமன்ற உத்தரவு பெற்று வழிபடச் சென்ற தமிழர்களை அது விரட்டி அடித்தது. பொங்கல் செய்ய மூட்டிய அடுப்பையும் அது சப்பாத்துக்காலால் எட்டி உதைத்தது. அந்த இடத்திற்கு ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் சென்றார் தமிழர்களும் சைவ மதமும் அவமதிக்கப்பட்டதற்கு நியாயம் கேட்பார் என நினைத்தோம். ஆனால் அவரோ புத்த பிக்குவையும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்த விகாரையையும் வணங்கிவிட்டு வந்துள்ளார். நல்லவேளை வழக்கம்போல் தன் வேட்டியை உரிந்து அந்த பிக்குவிற்கு கொடுக்கவில்லை. அது சரி இந்த மறவன்புலவு சச்சிதானந்திற்கு “தமிழ் இனக் காவலன்” பட்டம் கொடுத்தவன் எவன்டா?

No comments:

Post a Comment