Sunday, July 30, 2023

சிங்கள அரசு புலிகளை “பயங்கரவாதிகள்” என்று கூறியது

சிங்கள அரசு புலிகளை “பயங்கரவாதிகள்” என்று கூறியது சிங்கள அரசு புலிகளை மட்டுமல்ல ஆயம் ஏந்திப் போராடிய தமிழ் இளைஞர்கள் எல்லோரையும் “பயங்கரவாதிகள்” என்றது சிங்கள அரசு தமிழ் இளைஞர்களை மட்டுமல்ல ஆயுதம் ஏந்திப் போராடிய சிங்கள இளைஞர்களையும் “பயங்கரவாதிகள்” என்று கூறியே சுட்டுக் கொன்றது. சிங்கள அரசு மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா அரசுகளுமே தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை “பயங்கரவாதிகள்” என்றே கூறுகின்றன. இந்தியாவில் ஆயுதம் ஏந்திய பகத்சிங் ஆங்கிலேய அரசுக்கு பயங்கரவாதி. தென்ஆப்பிரிக்காவில் போராடிய நெல்சன் மண்டலோ பெயர் இன்றும் அமெரிக்க பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளது. அரச பயங்கரவாதத்திற்கு பதில் அளிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு. அதை பயங்கரவாதம் என்று குறிப்பிடுவது தவறு. இலங்கையில் தமிழ் இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று ஜனாதிபதி ஜெயவர்த்தனா குறிப்பிட்டபோது “ நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் இல்லை” என்று தங்கத்துரை நீதிமன்றில் தெரிவித்தார். அதுமட்டுமன்றி இன்று ஆனையிறவில் உள்ள ராணுவமுகாம் விரைவில் அம்பாந்தோட்டையில் வரும். அப்போது அது சிங்கள இளைஞர்களை கொல்லும் என்றும் எதிர்வு கூறியிருந்தார். அவர் கூறியபடி 1989ம் ஆண்டு அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. இவ்வாறு எமது போராளிகள் தெளிவான சிந்தனையோடு சரியான வழிகாட்டியாக இருந்துள்ளார்கள். எமக்கு பெருமை தேடித்தந்த அவர்களை நினைவுகூர்வது அவசியமானதே.

No comments:

Post a Comment