Saturday, July 15, 2023

மன்னாரில் எண்ணெய்வளம்

மன்னாரில் எண்ணெய்வளம் பலாலி விமானநிலையம் காங்கேசன் துறைமுகம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை திருமலை எண்ணெய் குதங்கள் சம்பூரில் 500 ஏக்கர் நிலம் மற்றும் அனல் மின்சார நிலையம் பூநகரி காற்றாலை புல்மோட்டை இல்மனைற் கனிமவளம் திக்கம் வடிசாராய ஆலை இத்தனையும் இந்தியாவுக்கு வழங்கியபோது வாய் பொத்திக்கொண்டு மௌனமாக இருந்தவர்கள் நயினாமடு சீனித் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த நயினாமடு சீனித் தொழிற்சாலை மூலம் சீனா வருகின்றது. எனவே இந்தியாவுக்காக எதிர்ப்பதாக இவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் சீன முதலீடுகள் குறித்து இந்தியாவே அக்கறைப்படவில்லை. அப்புறம் இவர்கள் எதற்கு இத்தனை கவலை இந்தியாவுக்காக படுகிறார்கள்? அதைவிட, இலங்கையில் சீனா செய்த முதலீட்டைவிட அதிக முதலீட்டை இந்தியாவில் செய்துள்ளது என்பது இவர்களுக்கு தெரியுமா? இந்தியாவுக்காக எதிர்ப்பு தெரிவித்தால் இந்தியா தீர்வு பெற்றுதரும் என இந்த முட்டாள்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த சீனித் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய சிங்கள அரசுக்குத்தான் இந்திய அரசு உதவி வழங்குகின்றது என்பதை இவர்கள் எப்போது உணரப் போகின்றனர்?

No comments:

Post a Comment