Sunday, July 30, 2023

ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம்

•ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவுடன் ஒரு உரையாடல் அப்பாவி தமிழன் - ஐயா! குருந்தூர் மலையில் பொங்கல் செய்து வழிபடச் சென்ற எம்மை பிக்குகள் பொலிசாருடன் சேர்ந்து விரட்டி அடித்துள்ளனர். மறவன்புலவு சச்சிதானந்தம் - என்னது மன்னார் ஆயர் இந்துக்களை வழிபட அனுமதிக்காமல் தடுக்கிறாரா? அப்பாவி தமிழன் - மன்னார் ஆயர் தடுக்கவில்லை. புத்த பிக்குகள்தான் தடுக்கிறார்கள் ஐயா. மறவன்புலவு சச்சிதானந்தம் - அப்படியென்றால் சிவத்துரோகி சுமந்திரன் தடுக்கிறாரா? அவரும் மனைவியும் எம் இந்துக்களை மத மாற்றம் செய்ய முயலுகின்றனர். அப்பாவி தமிழன் - ஐயோ ஐயா! சுமந்திரன் இல்லை. புத்த பிக்குகள்தான் தடுக்கிறார்கள். மறவன்புலவு சச்சிதானந்தம் - புத்த பிக்குகள் நல்லவர்கள் ஆயிற்றே. அவர்கள் அப்படி செய்ய மாட்டார்களே. நான் அவர்கள் உட்கார என் வேட்டியையே உரிந்து கொடுத்தேன் அல்லவா? அப்பாவி தமிழன் - ஆமாம் ஐயா. அதனால்தான் அவங்கள் எங்கள் கோமணத்தையே உரியப் பார்க்கிறாங்கள். நீங்கள்தான் வந்து நியாயம் கேட்க வேண்டும் ஐயா. மறவன்புலவு சச்சிதானந்தம் - கிருத்தவர்கள் அல்லது முஸ்லிம்கள் பிரச்சனை பண்ணினால் கூறுங்கள் உடனே வருகிறேன். பிக்கு மற்றும் சிங்கள அரசுக்கு எதிராக நான் வாய்கூட திறக்கமாட்டேன். அப்படித்தான் எனக்கு இந்திய தூதர் கூறியிருக்கிறார். அப்பாவி தமிழன் - என்னய்யா இப்படி கூறுகின்றீர்கள்? நீங்கள் கேட்டபடி உங்களுக்கு “தமிழினத்தின் காவல் தலைவன்” என்று பட்டம் தந்தோமே. இப்ப எம்மை காக்க முடியாது என்றால் மற்றவங்கள் சிரிப்பாங்களே ஐயா? மறவன்புலவு சச்சிதானந்தம் - ஒன்று செய்யலாம். எல்லோரும் சேர்ந்து இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்புவோம். அப்பாவி தமிழன் - என்னய்யா இப்படி சொல்றீங்க? பாபர் மசூதியை இடித்தது போல் புத்த விகாரையை உடைப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு முன்னால வீரமாக பேசினீர்களே? மறவன்புலவு சச்சிதானந்தம் - அது ஏதோ உணர்ச்சி வேகத்தில பேசிட்டன். ஆனா அப்புறம் இந்திய தூதர் அழைத்து யாரைக் கேட்டு இப்படி பேசினீங்க என்று டோஸ் விட்டது எனக்கு மட்டும்தானே தெரியும். அப்பாவி தமிழன் - அப்ப என்ன செய்யிறது ஐயா? லண்டனில பாலம் கட்டுற ஆட்களிட்டை கேட்டுப் பார்க்கலாமா? மறவன்புலவு சச்சிதானந்தம் - அவங்க றூட் வேற . என்ர றூட் வேற. நான் ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி ஊடாக பாலம் கட்டுறேன். அவங்க அண்ணாமலை ஊடாக பாலம் கட்டுறாங்க. அப்பாவி தமிழன் - அதுமட்டுமன்றி அம்மையார் ஒருவர் அர்ஜீன் சம்பத் ஊடாக பாலம் கட்டுறார். காசிஆனந்தன் இந்து தமிழீழம் என்று கூறி இன்னொரு பாலம் கட்டுறார். இப்படி பல பாலம் கட்டப்படுகிறது. ஆனால் எம்முடைய கவலை என்னவென்றால் இந்த பாலம் எல்லாம் எப்ப கட்டி முடியும்? அதில் மோடி எப்ப வருவார்? நாம் எப்ப குருந்தூர் மலையில் பொங்கல் செய்து வழிபடுவது? மறவன்புலவு சச்சிதானந்தம் - உனக்கு உரிமை பெற்றுத்தர இந்திய அரசு வரவேண்டும் என்று நீ நம்புகிறவரை எம்மைப் போன்றவர்கள் பாலம் கட்டுவதாக கூறிக்கொண்டே இருப்போம். அதை அப்பாவி நீ நம்பிக்கொண்டிருப்பாய். அப்பாவி தமிழன் - ?????? (யாவும் கற்பனை)

No comments:

Post a Comment