Sunday, July 30, 2023

1994ம் ஆண்டு சேலத்தில் கல்வி அமைச்சரை

1994ம் ஆண்டு சேலத்தில் கல்வி அமைச்சரை வரவேற்க வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் வெயில் கொடுமை காரணமாக மயங்கி விழுந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது தினமணி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த மாலன் “அரசியல்வாதிகளின் நிகழ்வில் மாணவர்களை பயன்படுத்துவது சரியா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி அறிவித்தார். அப்போது துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நான் இப் போட்டிக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். எனது கட்டுரை முதலாவது பரிசைப் பெற்றது. அக் கட்டுரை தினமணி இதழிலும் பிரசுரம் செய்யப்பட்டது. பரிசுத்தொகையான 500 ரூபா விரைவில் எனக்கு அனுப்பி வைக்கப்படும் என மாலன் குறிப்பிட்டிருந்தார். இதையறிந்த கியூ பிரிவு டிஎஸ்பி அதிகாரி இனி நான் எழுதக்கூடாது என்று தடைவிதித்தார். அதுமட்டுமல்ல பரிசுத்தொகையும் எனக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவுஸ்ரேலியா சென்ற ஈழத் தமிழர் சங்கரி சந்திரன் அங்கு எழுத அனுமதிக்கப்பட்டது மட்டுமன்றி 60000 டொலர் பெறுமதியான பரிசும் பெற்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சி தருகிறது.

No comments:

Post a Comment