Saturday, July 15, 2023

தன் மகன் பேரறிவாளன்

தன் மகன் பேரறிவாளன் விடுதலைக்காக தாயார் அற்புதம்மாள் நடந்தார். அவர் மீது இரக்கம் கொண்டு ஏழு தமிழர் விடுதலைக்கு தமிழ் சமூகம் வழி சமைத்தது. சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் தன் மகன் சாந்தன் விடுதலைக்காக தள்ளாத முதுமையிலும் அவர் தாயார் நடக்கிறார். அவருக்காக தமிழ் சமூகம் இரங்குமா? சாந்தன் விடுதலைக்கு வழி சமைக்குமா? தான் இறப்பதற்குமுன் தன் மகன் சாந்தனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று 33 வருடமாக அந்த தாய் காத்திருக்கின்றார். அந்த தாயின் விருப்பம் நிறைவேற தமிழக முதல்வர் இரக்கம் காட்டுவாரா?

No comments:

Post a Comment