Sunday, July 30, 2023

காலில் மிதிபடும் புழுகூட

காலில் மிதிபடும் புழுகூட எப்படி துடித்து எழுகிறது? ஏனெனில் அதற்கு யாரும் “நீ புழுதானே. நீ துடித்து எழுக்கூடாது” என்று போதிப்பதில்லை பட்ட அறுகம்புல்கூட சிறு துளி நீர் கண்டதும் எப்படி துளிர்த்து எழுகிறது? ஏனெனில் அதனிடம் யாரும் “நீ பட்டுப் போய்விட்டாய். எனவே இனி உன்னால் துளிர்க்க முடியாது” என்று கூறுவதில்லை. ஆனால் தமிழன் மட்டும் மீண்டும் எழுவேன் என்றதும் ஓடி வந்து சிலர் “ இதுவரை எழுந்து நின்று அழிந்தது போதாதா?” என்று கேட்கின்றனர். இன்னும் சிலர் “இந்தியாவை மீறி தமிழனால் ஒருபோதும் எழ முடியாது” என்கிறார்கள். அப்படியென்றால், 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது? 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது? 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயருக்கு எதிராக எப்படி எழுந்து நிற்க முடிந்தது? இப்படி காலம் பூராவும் வீழ்ந்த போதெல்லாம் எப்படி தமிழனால் எழுந்து நிற்க முடிந்தது? ஏனெனில், அப்போது சொகுசுமாளிகையில் இருந்துகொண்டு அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என் கூறும் தலைவர் இருக்கவில்லை அப்போது இந்தியா தீர்வு பெற்று தரும் எனக் கூறி கடிதம் எழுதும் தலைவர்கள் இருக்கவில்லை அப்போது அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டும் புலம்பெயர் அமைப்புகள் இருக்கவில்லை. அதனால்தான் அப்போது தமிழனால் எழுந்து நிற்க முடிந்தது. எனவே மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்றால், "தமிழா நீ வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரன். இப்படி அடிமையாக வீழ்ந்து கிடக்கலாமா?” என கேட்கும் ஒரு தலைவர் தேவை.

No comments:

Post a Comment