Saturday, July 15, 2023

செந்தில் பாலாஜி பலகோடி ரூபா ஊழல்

செந்தில் பாலாஜி பலகோடி ரூபா ஊழல் செய்துள்ளார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் ஸ்டாலின். இப்போது அந்த ஊழல்பேர்வழி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரும்பியபடி காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதனை ஜனநாயக விரோதம் என கண்டித்துள்ளார். ஆனால் இதே தமிழக முதல்வர் ஸடாலின் அவர்கள் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் ஜெயக்குமாரை சிறப்புமுகாமில் அடைத்ததோடு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையையும் மறுத்து வருகிறார். உரிய சிகிச்சை அளிக்காமல் தன் கண் பார்வை பழுதடைந்துவிட்டதை ஜெயக்குமார் முதல்வருக்கு அறிவித்தும் முதல்வர் இது குறித்து பதில் அளிக்கவும் இல்லை. அக்கறை கொள்ளவும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு ஒரு நியாயம். ஜெயக்குமாருக்கு இன்னொரு நியாயம். ஏனெனில் ஜெயக்குமார் ஒரு ஈழத் தமிழ் அகதி என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தமிழக முதல்வர் ஈழத் தமிழ் அகதிகள் மீது அக்கறை காட்டாதது ஆச்சரியம் தரவில்லை. ஆனால் ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோரும் அக்கறை கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பு - ஐபிசி முதலாளியால் தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம் என பாராட்டப்பட்ட கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்தில் கலைஞர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment