Saturday, July 15, 2023

நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படும்

•நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படும் தமிழ் தலைவர்கள் 13ஐ அமுல்படுத்துமாறு முதலில் இந்தியாவுக்கு கடிதம் எழுதினார்கள். இப்போது சர்வதேசம் ஒருமித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கனடாவிடம் கேட்டுள்ளனர். தீர்வுக்காக இவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். பல பிரிவுகளாக பிரிந்து நிற்கிறார்கள். ஆனால் சர்வதேசம் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்று எந்த முகத்துடன் கேட்கின்றனர்? சர்வதேசம் இதுவரை எந்தவொரு நாட்டுப் பிரச்சனைக்கும் ஒருமித்து அழுத்தம் கொடுக்கவில்லை என்பதுகூட இவர்கள் அறியவில்லையா? இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெறுவது. ஆனால் இவர்கள் போராடாமல் தீர்வு பெற்றுவிட முடியும் என நம்புகிறார்களே?

No comments:

Post a Comment