Saturday, July 15, 2023

ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும்

"ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட அயோக்கியன்" - சே விபச்சார பெண் ஒருவரை ஊர் மக்கள் நிர்வாணப்படுத்தி தண்டித்தபோது அதனைக் கண்ட புத்த பெருமான் அப் பெண்ணிற்கு முதலில் ஆடைகளை வழங்குங்கள் என்றாராம். உண்மைதான். ஒரு பெண்ணின் ஆடைகளை உரிந்து வீடியோ எடுத்து அதனை பரப்புவது தவறுதான். ஆனால் சிங்கள ராணுவம் முள்ளிவாய்க்காலில் தமிழ் பெண்களின் ஆடைகளை உரிந்து நிர்வாணப்படுத்திய போது ஏன் இந்த நியாயத்தைக் கேட்கவில்லை? அந்த போட்டோக்களை பொது வெளியில் பகிர்ந்து பாற்சோறு பொங்கி சாப்பிட்டபோது ஏன் இதனை தவறு என்று சுட்டிக்காட்டவில்லை? இன்று தமது பிக்கு ஒருவருக்கு நிகழும்போதுதான் புத்தர் பெருமான் கூறியதெல்லாம் நினைவுக்கு வருகிறதா?

No comments:

Post a Comment